காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சைக் கண்டித்தும் காங்கிரஸ்
காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகம் அருகே முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சைக் கண்டித்தும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்டத் தலைவர் ஜீ.வி.மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட துணைத் தலைவர் ஏ.பி.பிரபாகரன், வட்டாரத் துணைத் தலைவர் ஏ.பி.சுகுமாறன், நகரத் தலைவர் ராம.நீராளன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், சோனியாகாந்தி, ராகுல்காந்தி ஆகியோரை தரக்குறைவாக பேசிய தமிழக அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பேச்சைக் கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர். 
இதில் வட்டாரத் தலைவர் எம்.சம்பத், செய்தித் தொடர்பாளர் லோகநாதன், பில்டிங் குப்புசாமி, நகரச் செயலர் எம்.எல்.மோகன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில்...
அதேபோல், செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் காமராஜர் சிலை அருகில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் வழக்குரைஞர் ஆர்.சுந்தரமூர்த்தி தலைமை வகித்தார். நகரத் தலைவர் ஜே.பாஸ்கர் வரவேற்றார்.  நிர்வாகிகள் டி.ஜெயராமன், ரியாஸ்பாஸ், முருகன், நூர்பாய், உமாபதி, எல்.கண்ணன், ஆர்.குமரவேல், பார்த்தசாரதி, இளைஞரணி நகரத் தலைவர் பாலா விக்னேஷ் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மாநில செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.புத்தன், சி.ஆர்.பெருமாள், மறைமலைநகர் நகரத் தலைவர் தனசேகர், மாவட்டச் செயலர் வி.வெங்கட்ராமன், மறைமலைநகர் பாஸ்கர் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com