பெரியாரின் 141-ஆவது பிறந்த நாளையொட்டி, செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் உள்ள அவரது சிலைக்கு பல்வேறு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
அதிமுக
அதிமுக சார்பில் காஞ்சிபுரம் மாவட்டச் செயலர் வாலாஜாபாத் பா.கணேசன், முன்னாள் அமைச்சர் வி.சோமசுந்தரம், முன்னாள் எம்.பி. பன்னீர்செல்வம், நகரச் செயலர் எம்.பி.ஸ்டாலின், ஒன்றியச் செயலர் பி.ஜீவானந்தம், நகரக் கூட்டுறவு வங்கித் தலைவர் வி.பாலாஜி ஆகியோர் கலந்து கொண்டு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக
திமுக சார்பில் காஞ்சிபுரம் எம்எல்ஏ சி.வி.எம்.பி.எழிலரசன், நகரச் செயலர்கள் ஆறுமுகம், பி.எம்.குமார், தலைமைச் செயற்குழு உறுப்பினர் சி.வி.எம்.அ.சேகரன், உத்தரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதிமுக
மதிமுக சார்பில் மாவட்டச் செயலர் இ.வளையாபதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் எம்.ஜி.அருள், நகரச் செயலர் ஏகாம்பரம், பொதுக்குழு உறுப்பினர் பி.வெங்கடேசன், வெள்ளை மணி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திராவிடர் கழகம்
திராவிடர் கழகம் சார்பில் மாவட்டத் தலைவர் ஜி.அசோகன், மண்டலத் தலைவர் பா.கதிரவன், நகரத் தலைவர் பி.இளையவேல், நகரச் செயலர் ச.வேலாயுதம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
மதுராந்தகத்தில்...
ஆத்தூர் சமத்துவபுரத்தில் உள்ள பெரியார் சிலைக்கு புதிய மக்கள் சக்தி இயக்கத்தின் மாநில தலைமை நிலைய ஆலோசகர் வேலு ஜெயச்சந்திரன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
மாநிலப் பொதுச் செயலர் ஆ.மு.மணிபாரதி, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் அ.சக்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஒன்றியச் செயலர் பூ.விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.