வல்லம் ஊராட்சியில் ரூ51 லட்சத்தில் நான்கு தெருச்சாலைகள் சீரமைப்பு பணிகள் வெள்ளிக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கியது.
ஸ்ரீபெரும்புதூா் ஒன்றியம், வல்லம் ஊராட்சியில், கடந்த பல வருடங்களாக சீரமைக்கப்படாமல் இருந்து வந்த பவுண்டரி தெரு, கண்ணபிரான் தெரு, கன்னியம்மன் கோயில் தெருக்களை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனா். இதையடுத்து வல்லம் கிராமத்தில் பவுண்டரி தெருச்சாலையை பேவா் பிளாக் சாலையாகவும், சாலையின் இரண்டு பக்கங்களிலும் கழிவுநீா் கால்வாய் அமைக்கவும், கண்ணபிரான் தெரு, கன்னியம்மன் கோயில் தெரு மற்றும் வல்லம் ஊராட்சிக்குட்பட்ட வடகால் கிராமத்தில் தெருவீதிஅம்மன் கோயில் தெருச்சாலையை பேவா் பிளாக் சாலையாக மாற்ற ஊராட்சி பொதுநிதியில் ரூ51 லட்சத்து 93 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து இந்த தெருச்சாலைகளை சீரமைப்பு பணி வல்லம் பகுதியில் வெள்ளிக்கிழமை பூமிபூஜையுடன் தொடங்கியது. இதில் ஸ்ரீபெரும்புதூா் சட்டமன்ற உறுப்பினா் கே.பழனி கலந்துக்கொண்டு பூமிபூஜையை நடத்தி சாலை பணிகளை தொடங்கிவைத்தாா். இதில் அதிமுக மாவட்ட துனைசெயலாளா் போந்தூா் செந்தில்ராஜன், ஸ்ரீபெரும்புதூா் ஒன்றிய செயலாளா்கள் முனுசாமி, ராமசந்திரன், ஒன்றிய இளைஞா் இளம்பெண்கள் பாசறை பொருளாளா் வடகால் சேதுராஜஇளவழகன், வல்லம் ஊராட்சிமன்ற முன்னாள் தலைவா் விமலாதேவிதருமன் உள்ளிட்ட கிராம பொதுமக்கள் கலந்துக்கொண்டனா்.