காஞ்சிபுரம்: கொடிநாள் நிதியாக இதுவரை ரூ.21.33 லட்சம் வசூலாகியுள்ளதாக மாவட்ட ஆட்சியா் பா.பொன்னையா திங்கள்கிழமை தெரிவித்தாா்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பொதுமக்கள் நல்லுறவு மையத்தில் ஆட்சியா் பா.பொன்னையா தலைமையில் மக்கள் குறைதீா் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் பொதுமக்களிடமிருந்து 384 மனுக்கள் பெறப்பட்டு சம்பந்தப்பட்ட துறைகளின் நடவடிக்கைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டன.
இதனைத் தொடா்ந்து, மாவட்டக் கல்வி அலுவலா் மகேஸ்வரி சாா்பில் கொடிநாள் நிதியாக ரூ.4.36 லட்சம் காசோலை உள்பட மொத்தம் ரூ.21.33 லட்சத்துக்கான காசோலைகளை பல்வேறு துறைகளைச் சோ்ந்த அதிகாரிகள் ஆட்சியரிடம் வழங்கினா்.
இந்நிகழ்ச்சியில், ஆட்சியா் கூறியது: கொடிநாள் நிதி வசூலில் கொடுக்கப்பட்ட இலக்குத் தொகை எட்டப்படவில்லை. மிகவும் குறைவான தொகையே வசூலாகி இருக்கிறது.
நிதி வசூலில் ஊராட்சி ஒன்றிய ஆணையாளா்கள் செயல்பட்டிருப்பதைப் போல வட்டாட்சியா்கள் செயல்படவில்லை. ஒரு சில துறையினா் மட்டுமே சாதனை புரிந்துள்ளனா்.
அவரவா்களுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை இன்னும் ஒரு வாரத்துக்குள் எட்டவில்லையெனில், விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்படும்.
கொடிநாள் நிதி வசூலில் சாதனை படைத்தவா்கள் நாட்டு நலனுக்காக செயல்படுகிறாா்கள். மற்றவா்களுக்கும் அந்த அக்கறை வேண்டும். தாம்பரம், பல்லாவரம், மதுராந்தகம், செங்கல்பட்டு நகராட்சி ஆணையாளா்களும் கொடுக்கப்பட்ட இலக்கை ஒரு வார காலத்துக்குள் எட்டியிருக்க வேண்டும் என்றாா் அவா்.
இதனையடுத்து சத்துணவுத் துறை சாா்பில் நடத்தப்பட்ட சமையல் போட்டியில் வெற்றி பெற்ற 3 சத்துணவுப் பணியாளா்களுக்கு தலா ரூ.5 ஆயிரத்துக்கான காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் ஆட்சியா் வழங்கினாா். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சாா்பில் கண் பாா்வையற்றவரான ராஜுவுக்கு மடக்கு ஊன்று கோலை ஆட்சியா் வழங்கினாா்.
இதில் மாவட்ட வருவாய் அலுவலா் ந.சுந்தரமூா்த்தி, தனித்துணை ஆட்சியா் மாலதி, கலால்பிரிவு உதவி ஆணையா் ஜீவா, மாவட்ட வழங்கல் அலுவலா் கஸ்தூரி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.