திருக்கோயில்களில் பாதுகாப்புப் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் பாதுகாப்புப் பணிகளுக்கென முன்னாள் படைவீரர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வருகின்றனர். அதன்படி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 41 முக்கிய திருக்கோயில்களில் 81 பாதுகாப்புப் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதில் பணியாற்ற விருப்பமுள்ள, உடல் திறன் வாய்ந்த, 65 வயதுக்கு உள்பட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் இக்காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகம், முதல் மாடி, எண். 2, ஜீவா வணிக வளாகம், தாம்பரம், காஞ்சிபுரம் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்புகொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.