வராகர் ஜெயந்தி: ஆதிவராகர் கோயிலில் சிறப்புப் பூஜைகள்

மாமல்லபுரம் ஆதிவராகர் கோயிலில் வராகர் ஜெயந்தியையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
வராகர் ஜெயந்தியையொட்டி மாமல்லபுரம்  ஆதிவராகர் கோயிலில் நடைபெற்ற சிறப்புத் திருமஞ்சனம்.
வராகர் ஜெயந்தியையொட்டி மாமல்லபுரம்  ஆதிவராகர் கோயிலில் நடைபெற்ற சிறப்புத் திருமஞ்சனம்.


மாமல்லபுரம் ஆதிவராகர் கோயிலில் வராகர் ஜெயந்தியையொட்டி சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன.
மாமல்லபுரம் லைட் ஹவுஸ் சாலையில் பொதுப் பணித்துறை பங்களா அருகில் ஆதிவராகர் கோயில் உள்ளது. இக்கோயிலில் வராகர் ஜெயந்தியையொட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிவராகருக்கு பால், தயிர், சந்தனம், இளநீர், தேன், பன்னீர், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு சிறப்புத் திருமஞ்சனம், சிறப்பு அலங்காரம், மகாதீபாராதனை நடைபெற்றது.  
 ஏராளமான பக்தர்கள் வராகர் ஜெயந்தி விழாவில் கலந்துகொண்டு பெருமாளைத் தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பிரசாதம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகிகள், பட்டாச்சாரியார்கள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com