பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.எம்.வித்யா கேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளி ஆகியவை 100 சதவீத தேர்ச்சியைப் பெற்றுள்ளன.
சூரக்குட்டையில் செயல்பட்டு வரும் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய 166 மாணவ, மாணவியரும் தேர்ச்சி பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு தாளாளர் டி.லோகராஜ், முதன்மை முதல்வர் மங்கையர்க்கரசி, முதல்வர் திலகவதி ஆகியோர் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.
மதுராந்தகம் அய்யனார்கோவில் நகரில் செயல்பட்டு வரும் வி.எம்.வித்யா கேந்திரா மெட்ரிகுலேஷன் பள்ளியில் 26 மாணவ, மாணவியர் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வை எழுதினர். அவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவியருக்கு முதல்வர் கிறிஸ்டோபர் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகளை வழங்கிப் பாராட்டினர்.