மதுராந்தகம் தொன்மை நகர அரிமா சங்கத்தின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு, சேவைத் திட்டங்கள் தொடக்கம், புதிய உறுப்பினர்கள் இணைப்பு ஆகிய நிகழ்ச்சிகள் அண்மையில் நடைபெற்றன.
சங்கத் தலைவர் ஆர்.துரைராஜ் தலைமை தாங்கினார். செயலர் டி.ஜெர்லின் ஜோஸ் வரவேற்றார். சாசனத் தலைவர் இ.பக்தவத்சலு முன்னிலை வகித்தார். புதிய தலைவராக எஸ்.கே.ராஜா, செயலராக எஸ்.வேணு, பொருளாளராக வீ.தணிகை அரசு ஆகியோரை மாவட்ட முன்னாள் ஆளுநர் எஸ்.மகேஷ் பதவியில் அமர்த்தி சிறப்புரை ஆற்றினார். புதிதாக உறுப்பினர்களாக சேர்ந்தவர்களை மாவட்டத் தலைவர் ஓ.வி.ஜெயகுமார் சங்கத்தில் இணைத்தார்.
சிறுநாகலூர் பிரேம் தொண்டு இல்லத்துக்கு 50 கிலோ அரிசி, மாரிபுத்தூர் அரசுப் பள்ளிக்கு வாட்டர் ஃபில்டர், இருளர் இன மக்களுக்கு வேட்டி, சேலைகள், 20 பள்ளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள நல உதவிகளை மாவட்ட இரண்டாம் நிலை ஆளுநர் ஐயனாரப்பன் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட நிர்வாகிகள் எம்.சிவானந்தம், பி.ராஜசேகரன், மண்டலத் தலைவர் கே.செல்வம், வட்டாரத் தலைவர் ஆர்.முருகன், சங்க நிர்வாகிகள் ஜி.ஜே.பிரபாகரன், ஆர்.துரைராஜ், எம்.தமிழ்மாறன்உள்பட பலர் கலந்துக்கொண்டனர். ஜி.சரவணன் நன்றி கூறினார்.