மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் மூலவர் இளங்கிளியம்மன் சமேத ஆட்சீஸ்வரருக்கும், அனைத்து சந்நிதிகளில் உள்ள சுவாமிகளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு கோயில் கொடி மரத்துக்கு அருகில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நந்தி பகவானுக்கு மாலை 6 மணிக்கு மகா தீபாரதானை காண்பிக்கப்பட்டது.