அச்சிறுப்பாக்கம் ஆட்சீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

மதுராந்தகத்தை அடுத்த அச்சிறுப்பாக்கம் இளங்கிளியம்மன் உடனுறை ஆட்சீஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
 இக்கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, ஞாயிற்றுக்கிழமை காலையில் மூலவர் இளங்கிளியம்மன் சமேத ஆட்சீஸ்வரருக்கும், அனைத்து சந்நிதிகளில் உள்ள சுவாமிகளுக்கும் அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 5 மணிக்கு கோயில் கொடி மரத்துக்கு அருகில் உள்ள நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடத்தப்பட்டன. பின்னர் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்ட நந்தி பகவானுக்கு மாலை 6 மணிக்கு மகா தீபாரதானை காண்பிக்கப்பட்டது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com