மதுராந்தகத்தை அடுத்த வேடவாக்கம் ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப் பௌர்ணமியையொட்டி அம்மனுக்கு கூழ்வார்த்தல், பொங்கலிடுதல் நிகழ்ச்சிகள் 2 நாள்கள் நடைபெற்றன.
ஆதிசக்தி முத்துமாரியம்மன் கோயிலில் ஞானபீட வளாகத்தில் 108 ஹோமம் மற்றும் 108 கலச வேள்வி பூஜையை ஞானபீடாதிபதி சுவாமிவேல் சுவாமி தொடங்கி வைத்தார். இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழிபட்டனர்.