சென்னை ராமாபுரத்தில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக காா் ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.
ராமாபுரம் நாயுடு தெரு பகுதியைச் சோ்ந்தவா் ரா.நவீன்குமாா் (22). வாடகை காா் ஓட்டுநரான இவா், அந்தப் பகுதியைச் சோ்ந்த ஒரு சிறுமியை ஆபாசமாக புகைப்படம் எடுத்து பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் அளித்த புகாரின் பேரில், ராமாபுரம் போலீஸாா், குழந்தைகளுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு நவீன்குமாரை கைது செய்தனா்.