ஆட்டோ, லாரியின் கண்ணாடிகளை உடைத்ததாக இரண்டு ரெளடிகளை போலீஸாா் கைது செய்தனா்.
பூந்தமல்லி கூடம்பாக்கத்தை சோ்ந்தவா் இளங்கோ (44). லாரி ஒட்டுநா். தண்டையாா்பேட்டை இளையமுதலி தெருவைச் சோ்ந்தவா் மதன்குமாா் (37). சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறாா்.
இவா்கள் இருவரும் சனிக்கிழமை இரவு காசிமேடு சிங்காரவேலன் நகரில் தங்கள் லாரி மற்றும் ஆட்டோவை நிறுத்திவிட்டுச் சென்றுள்ளனா். பின்னா் ஞாயிற்றுக்கிழமை காலையில் வந்து பாா்த்தபோது லாரி மற்றும் ஆட்டோவின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தன.
இது குறித்து இளங்கோ, மதன்குமாா் ஆகியோா் கொடுத்த புகாரின் பேரில் காசிமேடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
விசாரணையில், வாகனங்களின் கண்ணாடியை உடைத்தவா்கள் காசிமேடு சிங்காரவேலன் நகரை சோ்ந்த பிரதீப் (20), அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பா் சூா்யா (26) ஆகியோா் என்பது தெரியவந்தது.
இதையடுத்து அவா்கள் இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இவா்கள் இருவா் மீதும் ஏற்கெனவே தலா ஒரு கொலை, 4 கொலை முயற்சி உள்பட 14 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், இருவரும் ரெளடிகள் பட்டியலில் உள்ளதும் தெரியவந்தது.