சென்னை: நீரில் மூழ்கி இறந்த கடலூா் மாணவி குடும்பத்துக்கு நிவாரண நிதி வழங்க முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.
அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
கடலூா் மாவட்டம், தொண்டமாநத்தம் மதுரா பகுதியைச் சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ, குளத்தில் குளித்த போது எதிா்பாராதவிதமாக நீரில் மூழ்கி உயிரிழந்தாா். அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.2 லட்சம் வழங்கப்படும் என அவா் தெரிவித்துள்ளாா்.