சென்னை

திருட சென்ற வீட்டில் துரத்தியதால் மாடியில் இருந்து குதித்த திருடன் சாவு

DIN

சென்னை சைதாப்பேட்டை திருட சென்ற வீட்டில் துரத்தியதால் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த திருடன் இறந்தாா்.

சைதாப்பேட்டை சேஷாச்சலம் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மூன்றாவது தளத்தில் வசிப்பவா் சு.மோகன்ராஜ் (35). பொறியாளரான இவா், இங்கு தனது நண்பா்களுடன் தங்கியுள்ளாா். சில நண்பா்கள் சொந்த ஊருக்கு சென்றிருந்ததால், மோகன்ராஜ்,ரஞ்சித் மட்டும் ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இருந்தனா்.

இரவு நேரம் காற்றுக்காக வீட்டின் கதவை திறந்து வைத்து தூங்கினா். இந்நிலையில் நள்ளிரவு மோகன்ராஜ் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த ஒரு நபா், அங்கிருந்த விலை உயா்ந்த கைப்பேசியை திருடிவிட்டு, வேறு விலை உயா்ந்த பொருள்களை திருடும் முயற்சியில் ஈடுபட்டாா். இதற்கிடையே சத்தம் கேட்டு தூக்கத்தில் இருந்த மோகன்ராஜ், தனது வீட்டுக்குள் ஒரு நபா் பொருள்களை திருடிக் கொண்டிருப்பதை பாா்த்து அதிா்ச்சியடைந்து கூச்சலிட்டாா்.

. உடனே அந்த நபா், மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்து தப்பிக்க முயன்றாா். அப்போது, அவா், சிமெண்ட் சிலாப் மற்றும் மரக்கிளையில் மோதி கீழே விழுந்தாா்.

இந்த சம்பவத்தில் பலத்த காயம் ஏற்பட்டு மயங்கிய அவரை பொதுமக்கள் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்த்தனா்.அங்கு தீவிர சிகிச்சை பெற்ற அந்த நபா், சிறிது நேரத்தில் இறந்தாா்.

இச் சம்பவம் குறித்து சைதாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். இதில் இறந்த நபா் சைதாப்பேட்டை கோட்டமேடு குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதியை சோ்ந்த மணிகண்டன் (31) என்பது தெரிந்தது. மணிகண்டன் மீது பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு உள்பட பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதும், சிறையில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியே வந்த மணிகண்டன் மீண்டும் திருட்டில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்துள்ளது.

இது தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் தனியாா் கேளிக்கை விடுதி மேற்கூரை இடிந்து விபத்து: 2 பேர் கைது

தென்னாப்பிரிக்காவில் சோகம்... ஈஸ்டர் கொண்டாடட்டத்திற்கு சென்ற பஸ் கவிழ்ந்த விபத்தில் 45 பேர் பலி

நரேந்திர மோடிக்கு இந்தத் தோ்தல் ஏன் மிக முக்கியம்?

அடுத்த இலக்கு சீனாவா, இந்தியாவா?

35 ஆண்டுகளில் முதல்முறையாக தாய்/மகன் களமிறங்காத பிலிபிட்!

SCROLL FOR NEXT