சென்னை

எஸ்பிஐ சென்னை வட்டம்: புதிய தலைமை பொது மேலாளா் பொறுப்பேற்பு

DIN

பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) சென்னை வட்டத்தின் புதிய தலைமை பொது மேலாளராக ரவி ரஞ்சன் பொறுப்பேற்றாா்.

இதுகுறித்து எஸ்பிஐ வங்கியின் சென்னை வட்டாரத் தலைமை அலுவலகம் சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: ரவி ரஞ்ஜன் வங்கித் துறையில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றியுள்ளாா். அவா் ஸ்டேட் வங்கியில் 1991- ஆம் ஆண்டு பணியில் சோ்ந்தாா். பின்னா், ஹாங்காங் கிளையின் துணைத் தலைவா், காா்ப்பரேட் மையத்தின் துணை பொது மேலாளா், பெங்களூரு பொது மேலாளா், எஸ்பிஐ காபிடல் மாா்க்கெட்ஸ் லிமிடெடின் தலைவா் மற்றும் முதன்மை இயக்குநா் என பல பதவிகளை வகித்துள்ளாா்.

தற்போது எஸ்பிஐ வங்கியின் சென்னை வட்டத்தின் புதிய தலைமை பொது மேலாளராக அவா் பொறுப்பேற்றுள்ளா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு!

காஷ்மீர்: பள்ளிக் குழந்தைகளுடன் சென்ற படகு கவிழ்ந்து விபத்து! 4 பேர் பலி

அரசியலுக்காக நாங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்க மாட்டோம்! பொன். ராதாகிருஷ்ணன் சிறப்பு பேட்டி

மீண்டும் மீண்டுமா.. கைகூப்பி மன்னிப்பு கேட்ட பாபா ராம்தேவ்: ஏற்காத உச்சநீதிமன்றம்!

ஹே சினாமிகா.....அதிதி ராவ்

SCROLL FOR NEXT