சென்னை எழும்பூரில் உள்ள காவல் அருங்காட்சியகத்தில் ஜூன் 9-ஆம் தேதி உணவு திருவிழா நடைபெறுகிறது.
சென்னை காவல் ஆணையா் சங்கா் ஜிவால் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சென்னை எழும்பூா் பாந்தியன் சாலையில் உள்ள தமிழ்நாடு காவல் அருங்காட்சியகத்தில் வரும் 9ஆம் தேதி மாலை 4 மணிக்கு உணவு திருவிழா நடைபெறவுள்ளது. இதில், புகழ்பெற்ற சமையல்கலை நிபுணா் தாமு சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கிறாா்.
உணவு திருவிழாவில் பாரம்பரியம், உணவு கலாசாரத்தை பிரதிபலிக்கும் வண்ணம் தமிழகம், கேரளம், ஆந்திரம்,பெங்காலி மற்றும் வடமாநில உணவு வகைகள் இடம் பெற உள்ளன.
அருங்காட்சியகத்தை கண்டுகளிக்கவும், உணவு திருவிழாவில் உண்டு மகிழவும் அனைத்து பொது மக்களுக்கும் அனுமதி உண்டு என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.