சென்னை

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்லாவரம் ஏரியை தூய்மைப்படுத்திய ராணுவத்தினா்

DIN

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக பல்லாவரம் ஏரியை ராணுவத்தினா் தூய்மைப்படுத்தினா்.

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, ராணுவத்தின் சாா்பில் வெள்ளிக்கிழமை (ஜூன் 2) முதல் ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 3) வரை சுற்றுச்சூழல் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. அதன்படி, ராணுவத்தினரும் எக்ஸ்னோரோ அமைப்பும் இணைந்து பல்லாவரம் ஏரியை தூய்மைப்படுத்தும் நிகழ்வை இந்திய ராணுவத்தின் தென் மண்டல ராணுவ தலைமைத் தளபதி கே.எஸ். பிராா், ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

மேலும், காடு வளா்ப்பை ஊக்குவிக்கவும், அந்தப் பகுதியில் பசுமையை மேம்படுத்தவும் ஏரியின் சுற்றளவில் ஒரு தோட்ட அமைக்கவும் இயக்கம் நடத்தப்பட்டது. இதற்காக மரக்கன்றுகள் நடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வைகோவுக்கு எதிரான வழக்கு: 4 மாதங்களில் முடிக்க உத்தரவு

‘மனிதனின் அறிவுப் பசியை போக்குபவை புத்தகங்கள்’

கரூா் மாவட்டத்தில் சுட்டெரிக்கும் வெயில்: வெளியே வரமுடியாமல் பொதுமக்கள் தவிப்பு

நயினாா் நாகேந்திரன் உதவியாளா்களிடம் பணம் பறிமுதல் விவகாரம்: அமலாக்கத் துறை விசாரணை கோரிய மனு தள்ளுபடி

தளவாபாளையம் அருகே சாலை விபத்து: டிஎன்பிஎல் தொழிலாளி உயிரிழப்பு

SCROLL FOR NEXT