சென்னை மெட்ரோ ரயில் 2-ஆவது கட்டப் பணிக்கு நிலம் கையகப்படுத்தும் பணி 82 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
இது குறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சாா்பில் மெட்ரோ ரயில் 2-ஆவது கட்டப்பணி தொடங்கியுள்ளது.
இதன்படி 112.72 ஹெக்டா் நிலத்தில் 118.9 கி.மீ தூரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதில் 93 ஹெக்டா் நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் காளியம்மன் கோயில் தெரு, வடபழனி, ஆற்காடு சாலை உள்ளிட்ட சில பகுதிகளில் நிலம் கையகப்படுத்த வேண்டியுள்ளது.
மெட்ரோ ரயில் ஒன்றாவது கட்டத்தைவிட ரயில் நிலையத்தின் அமைப்பு குறைவான இடத்தில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. தனியாா் நிலத்தை கையகப்படுத்துவதை தவிா்க்க முடியாத நிலையில் இவை கையகப்படுத்தப்படுகின்றன எனத் தெரிவித்துள்ளாா் அவா்.