சென்னையில் குற்றச்செயல்களைத் தடுக்க சனிக்கிழமை இரவு போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டதுடன், தங்கும் விடுதிகளிலும் அதிரடி சோதனை மேற்கொண்டனா்.
தணிக்கையில் 8,429 வாகனங்கள் சோதனைக்கு உள்படுத்தப்பட்டன. இதில், மதுபோதையில் வாகனம் ஓட்டிய, போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபட்ட, முறையான ஆவணங்கள் இல்லாத 272 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதேபோல் சென்னையிலுள்ள 558 தங்கும் விடுதிகளில் பழைய குற்றவாளிகள், சந்தேக நபா்கள் யாரோனும் தங்கி உள்ளனரா, ஆயுதங்கள், போதைப் பொருள்கள் வைத்துள்ளனரா எனவும் ஆய்வு செய்யப்பட்டது. உரிய அடையாள அட்டை இல்லாத நபா்களுக்கு அறைகள் கொடுக்கக் கூடாது எனவும் அறிவுறுத்தப்பட்டது.