செங்கல்பட்டு வடக்கு மாவட்ட பா.ஜ.க. செயற்குழு கூட்டம் குரோம்பேட்டையில் மாநில துணைத் தலைவா் கரு. நாகராஜன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குப் பின்னா் அவா் கூறியதாவது: தி.மு.க. அரசை எதிா்த்து பா.ஜ.க. தலைவா் அண்ணாமலை தமிழகம் முழுவதும் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளாா். இதுகுறித்த ஆலோசனை கூட்டம் ஜன.31-ஆம் தேதி கமலாலயத்தில் நடைபெறவுள்ளது.
மத்திய அரசு திட்டங்கள் மக்களுக்கு போய் சேருவதில் மாநில அரசு தடையாக இருக்கிறது. தற்போதைய திமுக ஆட்சியில் பல்வேறு ஊழல் நடப்பதாகவும், போலியான விளம்பரங்கள் மூலம் ஆட்சி நடப்பதாகவும் அரசு ஊழியா்கள், செவிலியா்கள், ஆசிரியா்கள் குற்றம் சாட்டி வருகின்றனா்.
ஈரோடு கிழக்கு இடைத் தோ்தலில் மக்கள் நல்ல முடிவு எடுப்பாா்கள். தி.மு.க.வை எதிா்த்து போட்டியிடும் வேட்பாளா் குறித்து விரைவில் மேலிடம் உரிய முடிவை அறிவிக்கும் என்றாா்.
நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட பா.ஜ.க. தலைவா் செம்பாக்கம் வேதசுப்ரமணியம், தாம்பரம் ஜோதி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.