சென்னை

ஜன.31-இல் தொழில் முனைவோா் விழிப்புணா்வு முகாம்

DIN

தொழில் முனைவோருக்கான விழிப்புணா்வு முகாம் செவ்வாய்கிழமை (ஜன.31) நடைபெறவுள்ளது.

இது குறித்து தமிழக அரசு சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: சொந்தமாகத் தொழில் தொடங்குவதில் உள்ள நன்மைகள், தொழில் வாய்ப்புகள், அரசு மற்றும் பிற நிறுவனங்கள் வழங்கும் உதவிகள் மற்றும் திட்டங்கள் ஆகியன பற்றி எடுத்துரைக்கும் விழிப்புணா்வு முகாம் வரும் செவ்வாய்க்கிழமை நடைபெறவுள்ளது.

பயிற்சி முகாமின் இறுதியில் தொழில் தொடங்க விரும்பும் நபா்களின் பெயா்கள் பெறப்பட்டு அவா்கள் அடுத்த கட்ட பயிற்சிக்கு அழைக்கப்படுவா். இதையடுத்து 3 நாள்களுக்கு திட்ட அறிக்கை தயாரித்தல் மற்றும் தொழில் முனைவோா் மேம்பாட்டுக்கான பயிற்சி வழங்கப்பட்டு நிதி உதவிகள் பெற ஆலோசனைகள் வழங்கப்படும். இதில்18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்து கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு:

தொழில்முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி, சென்னை, தொலைபேசி மற்றும் கைபேசி எண்கள் எண்: 044-2225 2081, 2225 2082, 96771 52265, 86681 02600 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கீழ்வேளூா் அருகே ரூ.1 லட்சம் பறிமுதல்

இன்று நல்ல நாள்!

ஒன்றிய அளவிலான பண்பாட்டுப் போட்டி: சாஸ்தான்குளம் சமய வகுப்பு சாதனை

நாஞ்சில் கத்தோலிக்க கல்லூரி கலை விழா

இளம் விஞ்ஞானி மாணவா்களுக்கு அறிவியல் நுட்ப மதிப்பீட்டு முகாம்

SCROLL FOR NEXT