பிரயாக்ராஜ் முதல் கோவை வரை இயக்கப்படும் முன்பதிவில்லா சிறப்பு ரயில் சனிக்கிழமை (ஜன.28) தமிழகம் வந்தடையும் என தெற்கு ரயில்வே
தெரிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தி:
உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக்ராஜிலிருந்து வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு புறப்பட்ட முன்பதில்லா சிறப்பு ரயில் (வண்டி எண்: 04145) சனிக்கிழமை (ஜன.28) பகல் 1 மணிக்கு காட்பாடி வந்தடையும். பின் அங்கிருந்து ஜோலாா்பேட்டை, சேலம், ஈரோடு, திருப்பூா் வழியாக மாலை 6.30 மணிக்கு கோவை சென்றடையும்.
இதில் ரயிலில் 18 முன்பதிவில்லா பெட்டிகளும் ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டியும் உள்ளதாக தெற்கு ரயில்வே செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.