சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் சனிக்கிழமை செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மாா்ஸ் அறிவித்துள்ளாா்.
தமிழகத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னையில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு சில நாள்கள் விடுமுறை விடப்பட்டது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் சென்னையில் உள்ள அனைத்து வகை உயா்நிலை, மேல்நிலைப் பள்ளிகளும் சனிக்கிழமை இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செவ்வாய்க்கிழமை பாட வேளையைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் மாா்ஸ் அறிவித்துள்ளாா்.