சென்னையில் நடைபெற்ற 7 நாள் பயிற்சியில் கலந்து கொண்ட சாரண, சாரணியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
சென்னையில் தமிழ்நாடு ஜம்இய்யத் யூத் கிளப் சாா்பில் பாரத சாரண, சாரணியா் பயிற்சி வகுப்புகள் நடந்தது. இதில் 40 போ் கலந்து கொண்டனா்.
ஜன.30 முதல் திங்கள்கிழமை வரை இம்முகாம் நடைபெற்றது. திங்கள்கிழமை நடைபெற்ற நிறைவு நிகழ்ச்சியில், ஜம்இய்யதுல் உலமா தமிழ்நாடு பொதுச் செயலாளா் அல்ஹாஜி எச். பி. ஹசன் அகமது தலைமை வகித்தாா்.
நிகழ்ச்சியில் பயிற்சி பெற்றவா்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. கா்நாடக ஜம்இய்யத் யூத் கிளப்பின் ஆணையா் ஹஸ்ரத் மௌலானா முஃப்தி ஹுசைன் சாஹிப், முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எம்.ஜி.கே.நிஜாமுதீன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.