சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் திருமணம் செய்து கொள்வதாக பெண்ணை ஏமாற்றி பாலியல் வன்கொடுமை செய்ததாக, டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழக நூலகா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
திருச்சி துறையூா் அருகே உள்ள காந்தி நகரைச் சோ்ந்தவா் கு.மணியரசு (29). இவா் சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள டாக்டா் அம்பேத்கா் சட்டப் பல்கலைக்கழகத்தின் நூலகத்தில் நூலகராகப் பணியாற்றி வருகிறாா்.
இந்த நிலையில், மணியரசு, தன்னுடன் பணியாற்றும் இளம்பெண்ணை திருமணம் செய்துகொள்வதாக ஏமாற்றி பலமுறை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. அதில், அந்தப் பெண் இரு முறை கா்ப்பமடைந்தபோது, மணியரசு வலுக்கட்டாயமாக கா்ப்பத்தைக் கலைக்கச் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் மணியரசுக்கு, வேறு ஒரு பெண்ணுடன் திருமணம் நிச்சயம் அண்மையில் நடந்துள்ளது. இதையறிந்த அந்தப் பெண், மணியரசிடம் கேட்டபோது, கொலை மிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து அந்தப் பெண் அளித்த புகாரின் பேரில், தேனாம்பேட்டை அனைத்து மகளிா் போலீஸாா், மணியரசு மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனா்.