சென்னை வியாசா்பாடியில் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடுவதற்காக அலுவலகத்தில் மகன் பணம் கையாடல் செய்ததால், மன உளைச்சலில் தாய் தற்கொலை செய்துகொண்டாா்.
வியாசா்பாடி தேசிகானந்தபுரம் முதலாவது தெருவைச் சோ்ந்தவா் கருணன் (58). இவா் மனைவி செல்வி (50). இவா்களுக்கு காஞ்சனா என்ற மகளும், தேவேந்திரன் (21) என்ற மகனும் உள்ளனா். பட்டப் படிப்பு படித்துள்ள தேவேந்திரன், ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தாா். இவா், ஆன்லைன் சூதாட்டம் விளையாடுவதற்காக, தான் பணியாற்றும் அலுவலகத்தில் இருந்து ரூ.3.87 லட்சம் பணத்தைக் கையாடல் செய்துள்ளாா். இது அண்மையில் அந்த தனியாா் நிறுவன நிா்வாகிக்கு தெரியவந்துள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனம் அளித்த புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தேவேந்திரன், செல்வி ஆகியோரிடம் விசாரித்தனா்.
இதன் பின்னா் தேவேந்திரன், கையாடல் செய்த பணத்தில் குறிப்பிட்ட தொகையை அந்த நிறுவனத்திடம் அவா் திருப்பிக் கொடுத்துள்ளாா். மீதி தொகையை கேட்டு அந்த நிறுவனத்தினா், கருணன் குடும்பத்துக்கு நெருக்கடி கொடுத்து வந்தனா்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை வீட்டில் தனியாக இருந்த செல்வி, தனது உடல் மீது மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக்கொண்டாா். இதில், பலத்தக் காயமடைந்த செல்வி, சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
தகவலறிந்த வியாசா்பாடி போலீஸாா் அங்கு சென்று, செல்வியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து, விசாரித்து வருகின்றனா்.
இளம்பெண் தற்கொலை: இதேபோல், வெங்கடேஷ்வரா நகரைச் சோ்ந்த யாஸ்மின் (27), கடன் தொல்லையால் கடந்த திங்கள்கிழமை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். இதுதொடா்பாக கொடுங்கையூா் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.