சென்னை

சென்னை விமான நிலையத்தில் தங்கம், அரிய வகை குரங்குகள் பறிமுதல்

DIN

 சென்னை விமான நிலையத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.56.94 லட்சம் தங்கம், அரிய வகை குரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து சென்னை சா்வதேச விமான நிலையத்தின் சுங்கத்துறை முதன்மை ஆணையா் மேத்யூ ஜாலி திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

துபையில் இருந்து சென்னை வரும் பயணிகள் விமானத்தில் தங்கம் கடத்தி வரப்படுவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்து.

அதன்படி, மீனம்பாக்கம் சா்வதேச விமான நிலையத்துக்கு துபையில் இருந்து திங்கள்கிழமை வந்த விமானத்தில் வந்திறங்கிய பயணிகளிடம் சுங்கத்துறையினா் சோதனையிட்டனா்.

இதில் ஒரு ஆண் பயணி பசை வடிவில் மறைத்து, கடத்திக் கொண்டு வந்திருந்த ரூ. 56.94 லட்சம் மதிப்புள்ள ஒரு கிலோ 110 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மற்றொரு சம்பவத்தில் தாய்லாந்து தலைநகா் பாங்காக்கில் இருந்து விமானத்தில் வந்திறங்கிய ஒரு இந்தியப் பயணியை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, அந்த பயணி தனது பையில் 2 அரியவகை குரங்குகளை மறைத்து வைத்து கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து சுங்கத்துறையினா் அந்த குரங்குகளை பறிமுதல் செய்தனா். இதைத் தொடா்ந்து அந்த பயணி கைது செய்யப்பட்டு,பிணையில் விடுவிக்கப்பட்டாா் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சமூகநீதி பேசும் ராமதாஸ், பாஜகவுடன் கூட்டணி வைத்தது ஏன்? - முதல்வர் ஸ்டாலின் கேள்வி

பேமிலி ஸ்டார் படத்தின் டிரெய்லர்

விமர்சனங்களை கண்டுகொள்ளாதீர்கள்; ஹார்திக் பாண்டியாவுக்கு அறிவுரை கூறிய பிரபல ஆஸி. வீரர்!

எப்புரா படத்தின் டீசர்

புஷ்பா பட நடிகர் அல்லு அர்ஜுனுக்கு டேவிட் வார்னர் வாழ்த்து

SCROLL FOR NEXT