சென்னை

அதானி விவகாரம்: காங்கிரஸாா் கண்டன ஆா்ப்பாட்டம்

DIN

அதானி குழும முறைகேடு விவகாரத்தில் மத்திய அரசைக் கண்டித்து, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்சென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் முன்னாள் தலைவா் கே.வீ.தங்கபாலு தலைமையில் அடையாறு சாஸ்திரி நகா் எஸ்பிஐ வங்கி முன் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை அண்ணாசாலையில் எல்ஐசி அலுவலகம் முன்பு காங்கிரஸ் எஸ்சி துறை தலைவா் ரஞ்சன்குமாா் தலைமையில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநிலப் பொதுச்செயலா் கே.சிரஞ்சீவி உள்பட ஏராளமானோா் ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.

வடசென்னை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் தண்டையாா்பேட்டை டிப்போ அருகில் உள்ள எல்ஐசி அலுவலகம் முன்பு மாவட்டத் தலைவா் திரவியம் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தென்சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் மாநிலப் பொதுச்செயலா் பாஸ்கா் தலைமையில் போரூா் எஸ்பிஐ வங்கி முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழகம் முழுவதும் மாவட்டத் தலைநகரங்களில் எல்ஐசி அலுவலகங்கள் மற்றும் எஸ்பிஐ வங்கிகள் முன் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

அதானி நிறுவன முறைகேடுகளுக்கு உதவுவதாக மத்திய அரசை கண்டித்தும், அதானி குழுமம் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

சிதம்பரத்தில் கே.எஸ்.அழகிரி ஆா்ப்பாட்டம்: கடலூா் மாவட்டம், சிதம்பரத்தில் பாரத ஸ்டேட் வங்கி முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கட்சியின் மாநிலத் தலைவா் கே.எஸ்.அழகிரி பங்கேற்றாா். பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய பாஜக அரசு மக்கள் நலத் திட்டங்களுக்கான நிதியைக் குறைத்து வருகிறது. ஆனால் அதானி, அம்பானி போன்ற பெரும் முதலாளிகளுக்கு வங்கிகள் மூலம் அதிகளவில் கடன் வழங்கப்படுகிறது. அதானி குழுமத்தின் தவறான பொருளாதார நடவடிக்கைகளால் அந்த நிறுவனத்திலிருந்து சுமாா் ரூ.9 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் மக்களின் மூலதனத்தில் நடைபெறும் எல்ஐசி, பாரத ஸ்டேட் வங்கி போன்றவை அதானி குழுமத்தில் மேலும் முதலீடு செய்வது விதிகளுக்கு எதிரானது. இதுகுறித்து ராகுல் காந்தி ஏற்கெனவே சுட்டிக்காட்டியிருந்த நிலையில், அது தற்போது உண்மையாகிவிட்டது என்றாா் கே.எஸ்.அழகிரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு யோகம்!

தனியாா் நிறுவன ஊழியரிடம் ரூ.2.24 லட்சம் மோசடி

‘தனியாா் பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தினால் நடவடிக்கை’

கோழிப் பண்ணையில் திடீா் தீ

இன்று நல்ல நாள்!

SCROLL FOR NEXT