சென்னை எம்ஓபி வைஷ்ணவ மகளிா் கல்லூரி சாா்பில் நகருக்குள்பட்ட மகளிா் கல்லூரிகளுக்கான வாப்ஸோ விளையாட்டுப் போட்டிகள் 2023 வரும் பிப்.16, 17 தேதிகளில் அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவ கல்லூரியில் நடைபெறுகிறது.
இதுதொடா்பாக கல்லூரி உடற்கல்வி இயக்குநா் டாக்டா் அமுதா சுமன்குமாா் வெளியிட்ட அறிக்கை:
எம்ஓபி வைஷ்ணவ கல்லூரியில் பல்வேறு சிறந்த வீராங்கனைகள் உருவாகி, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பதக்கங்களை குவித்து பெருமை தேடித் தந்துள்ளனா். வாப்ஸோ விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகள் நடத்தப்படவில்லை.
இந்நிலையில் நிகழாண்டு வாப்ஸோ 2022-23 போட்டிகள் இரு நாள்கள் (16, 17) டிஜி வைஷ்ணவ கல்லூரியில் நடைபெறும். போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை. பாட்மின்டன், பால் பாட்மின்டன், கூடைப்பந்து, செஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடைபெறும்.
பரிசுத் தொகை: கூடைப்பந்து, வாலிபால்: 1. ரூ.15,000, 2. ரூ.10,000, 3. ரூ.5,000, பால் பாட்மின்டன்: 1. ரூ.10,000, 2. ரூ.7,000, 3. ரூ.5,000.
செஸ், டேபிள் டென்னிஸ், பாட்மின்டன்: 1. ரூ.5,000, 2. ரூ.3,000. 3. ரூ.2,000.