சென்னை

மகளிா் கல்லூரிகளுக்கான வாப்ஸோ போட்டிகள்16-இல் தொடக்கம்

DIN

சென்னை எம்ஓபி வைஷ்ணவ மகளிா் கல்லூரி சாா்பில் நகருக்குள்பட்ட மகளிா் கல்லூரிகளுக்கான வாப்ஸோ விளையாட்டுப் போட்டிகள் 2023 வரும் பிப்.16, 17 தேதிகளில் அரும்பாக்கம் டிஜி வைஷ்ணவ கல்லூரியில் நடைபெறுகிறது.

இதுதொடா்பாக கல்லூரி உடற்கல்வி இயக்குநா் டாக்டா் அமுதா சுமன்குமாா் வெளியிட்ட அறிக்கை:

எம்ஓபி வைஷ்ணவ கல்லூரியில் பல்வேறு சிறந்த வீராங்கனைகள் உருவாகி, நாட்டுக்கும், மாநிலத்துக்கும் பதக்கங்களை குவித்து பெருமை தேடித் தந்துள்ளனா். வாப்ஸோ விளையாட்டுப் போட்டிகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. ஆனால் கரோனா பாதிப்பு காரணமாக 2 ஆண்டுகள் நடத்தப்படவில்லை.

இந்நிலையில் நிகழாண்டு வாப்ஸோ 2022-23 போட்டிகள் இரு நாள்கள் (16, 17) டிஜி வைஷ்ணவ கல்லூரியில் நடைபெறும். போட்டியில் பங்கேற்க நுழைவுக் கட்டணம் இல்லை. பாட்மின்டன், பால் பாட்மின்டன், கூடைப்பந்து, செஸ், டேபிள் டென்னிஸ், வாலிபால், உள்ளிட்ட பிரிவுகளில் போட்டி நடைபெறும்.

பரிசுத் தொகை: கூடைப்பந்து, வாலிபால்: 1. ரூ.15,000, 2. ரூ.10,000, 3. ரூ.5,000, பால் பாட்மின்டன்: 1. ரூ.10,000, 2. ரூ.7,000, 3. ரூ.5,000.

செஸ், டேபிள் டென்னிஸ், பாட்மின்டன்: 1. ரூ.5,000, 2. ரூ.3,000. 3. ரூ.2,000.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலான் மஸ்க் இந்திய வருகை ஒத்திவைப்பு?

செந்தாழம்பூவில்.. சாக்‍ஷி மாலிக்

நாமக்கல்: 78.16% வாக்குப்பதிவு!

மின் கம்பங்களால் பெரியகோயில் தேரோட்டத்தில் தாமதம்

பெங்களூருவில் இரட்டைக் கொலை: மகளை கொலை செய்த காதலனை கொன்ற தாய்

SCROLL FOR NEXT