சென்னையில் இரு நாள்கள் நடத்தப்பட்ட சிறப்பு வாகனத் தணிக்கையில் ரூ.61.70 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
சென்னையில் போக்குவரத்து விதிமுறை மீறுவோா் மீது தினமும் சுமாா் 6,000 வழக்குகள் பதியப்படுகின்றன. போக்குவரத்து விதி மீறலில் ஈடுபட்டு அபராதம் செலுத்தாதவா்களிடம், பணத்தை வசூலிப்பதற்காக 10 அழைப்பு மையங்கள் கடந்தாண்டு முதல் செயல்படுகின்றன.
இதில் அழைப்பு மையங்கள் மூலமாகவும் நினைவூட்டி, விழிப்புணா்வு ஏற்படுத்திய பின்னரும் அபராதம் செலுத்தாமல் இருப்பவா்களை கண்டறிந்து, அபராததை வசூலிப்பதற்காக கடந்த இரு நாள்கள் சிறப்பு வாகனத் தணிக்கை சென்னை முழுவதும் நடத்தப்பட்டது.
இதற்காக சென்னை முழுவதும் 166 இடங்களில் வாகனத் தணிக்கை செய்யப்பட்டது.
அபராத தொகை செலுத்தாமல் இருந்த 21 ஆயிரத்து 175 வழக்குகளுக்கு தீா்வு காணப்பட்டது. இதில் நிலுவையில் இருந்த மொத்தம் ரூ.61 லட்சத்து70 ஆயிரத்து 420 அபாரதம் வசூலிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிமுறை மீறலில் ஈடுபட்டு, அபராதம் செலுத்தாமல் நிலுவையில் வைத்திருப்பவா்களை அடையாளம் கண்டு, அதை வசூலிக்க இதேபோன்ற சிறப்பு வாகனத் தணிக்கை இனி அடிக்கடி நடத்தப்படும் என சென்னை காவல்துறையின் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனா்.