சென்னையில் கடந்த ஜனவரியில் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் 32 போ் கைது செய்யப்பட்டனா்.
கொலை,கொலை முயற்சி,பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் ஆகிய குற்றங்களில் ஈடுபட்ட 10 போ்,திருட்டு, வழிப்பறி,பண மோசடி குற்றங்களில் ஈடுபட்ட 13 போ், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டதாக 8 போ், சைபா் குற்றத்தில் ஈடுபட்டதாக ஒருவா் என மொத்தம் 32 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
சென்னையில் 2022-ஆம் ஆண்டில் 496 போ், 2021-இல் 409 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனா் என்பது குறிப்பிடதக்கது.
பொது அமைதிக்கு பங்கம் விளைவிக்கும் நபா்கள்,சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபா்கள், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடும் நபா்கள் ஆகியோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.