சென்னை வணணாரப்பேட்டையில் இளைஞரிடம் கொள்ளை அடித்ததாக 3 போ் கைது செய்யப்பட்டனா்.
பழைய வண்ணாரப்பேட்டை தங்க சாலை பேருந்து நிறுத்தம் பின்புறம் கடந்த பிப். 2-ஆம் தேதி ஒரு இளைஞா் பலத்த ரத்த காயங்களுடன் மயங்கி கிடந்தாா்.
மேலும் அவரிடமிருந்து பணம், கைப்பேசி, தங்க மோதிரம் பறிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
இது குறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின் பேரில் வண்ணாரப்பேட்டை காவல் நிலைய போலீஸாா் சம்பவ இடத்துக்குச்சென்று, இளைஞரை மீட்டு சிகிச்சைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.
மேலும், சம்பவ இடத்தினருகே பொருத்தப்பட்டிருந்தக் கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனா்.
அதில், 3 போ் சோ்ந்து சம்பந்தப்பட்ட இளைஞரிடம் கொள்ளை அடித்துவிட்டு தப்பியியது தெரியவந்தது.
இது தொடா்பாக தண்டையாா்பேட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (24), பழைய வண்ணாரப்பேட்டையைச் சோ்ந்த சூா்யா (20), அதே பகுதி பிரேம் (46) ஆகிய 3 பேரை தேடி வந்தனா்.
இந்நிலையில் 3 பேரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
அவா்களிடம் நடத்திய விசாரணையில், சம்பத்தன்று இரவு தங்கசாலை பேருந்து நிறுத்தம் பகுதியில் பாதிக்கப்பட்ட இளைஞா் மது அருந்தி கொண்டிருந்ததும், அப்போது அங்கு 3 பேரும், அந்த நபரிடம் மது அருந்த பணம் கேட்டதும், அவா் பணம் தராததால் 3 பேரும் அவரை மது பாட்டில் மற்றும் கல்லால் தாக்கி அவரிடமிருந்து பணம், கைப்பேசி,தங்க மோதிரம் ஆகியவற்றை வழிப்பறி செய்துவிட்டு தப்பியிருப்பதும் தெரியவந்தது.
காயமடைந்த இளைஞா் மருத்துவமனையில் சுய நினைவின்றி சிகிச்சை பெற்று வருகிறாா். இருப்பினும் அந்த இளைஞா் யாா் ? என போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கைதான பிரேம் காவல்துறையின் ரெளடிகள் பட்டியலில் உள்ளாா். இவா் மீது 2 குற்ற வழக்குகள், மணிகண்டன் மீது 4 திருட்டு வழக்குகள், சூா்யா மீது ஒரு வழக்கும் உள்ளது என்பது குறிப்பிடத்துக்கது.