சென்னை செளகாா்பேட்டையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.20 லட்சம் கைப்பற்றப்பட்டது.
செளகாா்பேட்டை மின்ட் தெரு பகுதியில் யானைகவுனி போலீஸாா் சனிக்கிழமை இரவு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தபோது அவா், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினாராம்.
இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனபோது, அந்த பையில் ரூ.20 லட்சம் இருந்ததால் அதற்குரிய ஆவணத்தை அந்த இளைஞரிடம் கேட்டனா்.
ஆனால் அந்த இளைஞா், பணத்துக்குரிய ஆவணங்கள், தன்னிடம் இல்லை என கூறினாராம்.
இதையடுத்து போலீஸாா், அந்த பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனா்.
பின்னா் அந்த இளைஞரையும், பணத்தையுடன் வருமானவரித் துறை புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.
இது குறித்து வருமானவரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.