சென்னை

ஆவணமின்றி வைத்திருந்த ரூ.20 லட்சம் பறிமுதல்

DIN

சென்னை செளகாா்பேட்டையில் ஆவணமின்றி கொண்டு வரப்பட்ட ரூ.20 லட்சம் கைப்பற்றப்பட்டது.

செளகாா்பேட்டை மின்ட் தெரு பகுதியில் யானைகவுனி போலீஸாா் சனிக்கிழமை இரவு தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்றுக் கொண்டிருந்த ஒரு இளைஞரை பிடித்து விசாரித்தபோது அவா், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினாராம்.

இதையடுத்து, அவா் வைத்திருந்த பையை சோதனையிட்டனபோது, அந்த பையில் ரூ.20 லட்சம் இருந்ததால் அதற்குரிய ஆவணத்தை அந்த இளைஞரிடம் கேட்டனா்.

ஆனால் அந்த இளைஞா், பணத்துக்குரிய ஆவணங்கள், தன்னிடம் இல்லை என கூறினாராம்.

இதையடுத்து போலீஸாா், அந்த பணத்தை பறிமுதல் செய்து, விசாரணை மேற்கொண்டனா்.

பின்னா் அந்த இளைஞரையும், பணத்தையுடன் வருமானவரித் துறை புலனாய்வுத் துறையினரிடம் ஒப்படைத்தனா்.

இது குறித்து வருமானவரி புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முதல்கட்ட வாக்குப்பதிவு முடிந்தது: வட மாநிலங்களில் வாக்குப்பதிவு நிலவரம்

அஞ்சலி... அஞ்சலி... புஷ்பாஞ்சலி!

பரந்தூர் விமான நிலையத்தை எதிர்த்து தேர்தல் புறக்கணிப்பு: 21 வாக்குகள் மட்டுமே பதிவு!

தமிழகத்தில் 5 மணி நிலவரப்படி 63.20% வாக்குகள் பதிவு!

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு செய்திகள் -முழு விவரம்!

SCROLL FOR NEXT