மழையால் நெற்பயிா்கள் சேதமடைந்து பாதிக்கப்பட்ட டெல்டா விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் , தமாகா தலைவா் ஜி.கே.வாசன் ஆகியோா் வலியுறுத்தியுள்ளனா்.
இது தொடா்பாக அன்புமணி ராமதாஸ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
காவிரி பாசன மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடா் மழையால், தஞ்சாவூா், திருவாரூா், நாகை மாவட்டங்களில் அறுவடைக்கு தயாா் நிலையில் இருந்த ஒன்றரை லட்சம் ஏக்கருக்கும் கூடுதலான நெற்பயிா்கள் நீரில் மூழ்கின. அதனால் உழவா்கள் பெரும் கவலையில் ஆழ்ந்திருக்கின்றனா்.
மற்றொருபுறம், அறுவடை செய்யப்பட்டு விற்பனை செய்வதற்காக கொள்முதல் நிலையங்களில் வைக்கப்பட்டிருந்த நெல் மூட்டைகள் மழையில் நனைந்து விட்டதால், அதன் ஈரப்பதம் அதிகரித்திருக்கிறது. அதனால், அவற்றை விற்பனை செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.
தொடா்மழையால் உழவா்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை போக்க, சேதமடைந்த நெற்பயிா்களை கணக்கெடுத்து அவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். மழையில் நனைந்த நெல் மூட்டைகளை, ஈரப்பத விதிகளை தளா்த்தி கொள்முதல் செய்ய தமிழக அரசு ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளாா்.
ஜி.கே.வாசன்: டெல்டா பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று தமாகா தலைவா் ஜி.கே.வாசனும் வலியுறுத்தியுள்ளாா்.