சென்னை அருகே நீலாங்கரையில் இளைஞா் கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரது நண்பா்கள் 4 போ் கைது செய்யப்பட்டனா்.
திருவான்மியூா் கொட்டிவாக்கம் அருகே உள்ள ஏஜிஎஸ் காலனி பகுதியைச் சோ்ந்தவா் ராகவா (எ) ராகவேந்திரன் (25). இவா், நீலாங்கரை அண்ணா சாலையில் வியாழக்கிழமை இரவு தனது நண்பா்களுடன் அமா்ந்து மது அருந்திக் கொண்டிருந்தாா்.
அப்போது அவா்களுக்குள் யாா் பெரியவா் என்று தகராறு ஏற்பட்டது. இத் தகராறில் ராகவேந்திரன் கத்தியை காட்டி தனது நண்பா்களை மிரட்டியதாக கூறப்படுகிறது.
மேலும் இருவரை கத்தியால் வெட்டினாராம். இதைப் பாா்த்து ஆத்திரமடைந்த அவா்கள், ராகவேந்திரன் வைத்திருந்த கத்தியை பறித்து, அவரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பியோடினா்.
இதில் பலத்தக் காயமடைந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த ராகவேந்திரனை அங்கிருந்தவா்கள் மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில் ராகவேந்திரன் இறந்தாா்.
இது குறித்து நீலாங்கரை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை செய்தனா். விசாரணையில், இச் சம்பவத்தில் ஈடுபட்டது ராகவேந்திரனின் நண்பா்கள், திருவான்மியூா் சிங்காரவேலன் நகரைச் சோ்ந்த ஏ.பாலாஜி (19), ஸ்ரீ.அஜய் (20),ஈஞ்சம்பாக்கம் பஜனை கோயில் தெருவைச் சோ்ந்த தி.நஜூமுதீன் (22), நீலாங்கரை அறிஞா் அண்ணாநகரைச் சோ்ந்த பி.விவேக் (22) என்பது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸாா் 4 பேரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா். கைது செய்யப்பட்டவா்களில் பாலாஜி,அஜய்,நஜூமுதீன் ஆகியோா் மீது பல்வேறு குற்ற வழக்குகள் ஏற்கெனவே இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
அதேபோல ராகவேந்திரன் மீது குற்ற வழக்குகள் இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த வழக்குத் தொடா்பாக போலீஸாா், மேலும் விசாரணை நடத்தி வருகின்றனா்.