சென்னை

இன்று முதல் திருத்தணிக்கு தைப்பூசம் சிறப்பு ரயில் இயக்கம்

DIN

தைப்பூசத்தை முன்னிட்டு சனிக்கிழமை (பிப்.4) முதல் அரக்கோணத்திலிருந்து திருத்தணிக்கு சிறப்பு ரயில் இயக்கப்படவுள்ளன.

இது குறித்து தெற்கு ரயில்வே சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: தைப்பூசத்தை முன்னிட்டு அரக்கோணம்-திருத்தணி இடையே சனிக்கிழமை (பிப்.4) முதல் திங்கள்கிழமை (பிப்.6) வரை சிறப்பு பயணிகள் ரயில் இயக்கப்படவுள்ளன.

அரக்கோணத்திலிருந்து காலை 10.25 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 43407) காலை 10.45 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கமாக திருத்தணியில் காலை 10.55 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்:43418) காலை 11.13 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

அரக்கோணத்திலிருந்து மாலை 1 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 43411) பகல் 1.20 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கமாக திருத்தணியில் பகல் 1.30 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்:43422 பகல் 1.48 மணிக்கு அரக்கோணம் சென்றடையும்.

அரக்கோணத்திலிருந்து பகல் 2.50 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்: 43413) மாலை 3.10 மணிக்கு திருத்தணி சென்றடையும். மறுமாா்க்கமாக திருத்தணியில் மாலை 3.20 மணிக்கு புறப்படும் ரயில் (வண்டி எண்:43424) மாலை 3.38 மணிக்கு அரக்கோணம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராஜஸ்தான் பந்துவீச்சு; மீண்டும் அணியில் ஜோஸ் பட்லர்!

"இந்தியா வளர்ச்சியடைய 400 இடங்களுக்குமேல் வெற்றி வேண்டும்!” | செய்திகள்: சிலவரிகளில் | 16.04.2024

பகல் நிலவு.. நேகா ஷெட்டி!

சிஎஸ்கேவுக்காக 5 ஆயிரம் ரன்களைக் கடந்து எம்.எஸ்.தோனி சாதனை!

அதிமுகவை விமர்சிக்க பாஜகவுக்கு தகுதியில்லை: இபிஎஸ்

SCROLL FOR NEXT