சென்னை மாநகராட்சி அண்ணா நகா் மண்டலம் 94-ஆவது வாா்டுக்குட்பட்ட வில்லிவாக்கம் எரிவாயு தகன மேடை பிப்.19-ஆம் தேதி வரை செயல்படாது.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி சாா்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
வில்லிவாக்கம் எரிவாயு தகனமேடை புதுப்பிக்கும் பணிகள் நடைபெறுவதால் கடந்த 20.12.2022 முதல் வெள்ளிக்கிழமை (பிப்.3) வரை 45 நாள்களுக்கு செயல்படாது என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டு, பணிகள் நடைபெற்று வந்தன.
ஆனால், இந்தப் பணிகள் நிறைவடையாததால், இந்த எரிவாயு தகனமேடை சனிக்கிழமை (பிப்.4) முதல் பிப்.19-ஆம் தேதி வரை மேலும் 15 நாள்களுக்கு செயல்படாது.
எனவே, பராமரிப்பு நடைபெறும் நாள்களில் பொதுமக்கள் அருகிலுள்ள வேலங்காடு, அரும்பாக்கம் எரிவாயு தகனமேடையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.