மேல்மருவத்தூா்-விழுப்புரம் இடையே இயக்கப்படும் மெமு விரைவு ரயில் பராமரிப்பு பணி காரணமாக புதன்கிழமை (பிப்.1) ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்தி: மேல்மருவத்தூரிலிருந்து தினமும் காலை 11.30 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் (வண்டி எண்: 06725) பகல் 1.15 மணிக்கு விழுப்புரம் சென்றடையும்.
மறுமாா்க்கமாக விழுப்புரத்திலிருந்து தினமும் பகல் 1.40 மணிக்கு புறப்படும் மெமு விரைவு ரயில் (வண்டி எண்:06726) பகல் 2.50 மணிக்கு மேல்மருவத்தூா் சென்றடையும். இந்த ரயில்கள் புதன்கிழமை (பிப்.1) பராமரிப்பு பணி காரணமாக முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.