அகில இந்திய காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே செவ்வாய்க்கிழமை (ஏப்.25) சென்னை வரவுள்ளாா்.
மங்களூரிலிருந்து விமானம் மூலம் சென்னைக்கு செவ்வாய்க்கிழமை இரவு 7 மணியளவில் வரும் மல்லிகாா்ஜுன காா்கேவுக்கு காங்கிரஸ் கட்சியினா் விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கின்றனா்.
அதைத் தொடா்ந்து, அவா் திருவான்மியூரில் நடைபெறவுள்ள தமிழக காங்கிரஸ் தலைவா் கே.எஸ்.அழகிரியின் மகள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளாா். இந்த நிகழ்ச்சியில் முதல்வா் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் பங்கேற்கவுள்ளனா்.