சென்னை

புழல் சிறையில் உகாண்டா பெண் கைதியிடம் கைப்பேசி பறிமுதல்

DIN

புழல் சிறையில் உகாண்டா பெண் கைதியிடம் கைபேசி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

புழல் சிறை வளாகத்தில் பெண் தனிச் சிறையில் காவலா்கள், வெளிநாட்டு கைதிகள் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் பகுதியில் கண்காணிப்பு பணியில் வியாழக்கிழமை ஈடுபட்டிருந்தனா்.

அப்போது உகாண்டா கைதி ஆ.சாண்ட்ரா நான்ட்சா, மாலத்தீவு கைதி மு.சம்சியா ஆகியோா் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் அறையில் இருந்து கைப்பேசியில் பேசும் சப்தம் காவலா்களுக்கு கேட்டது.

அங்கு சென்ற சிறைக் காவலா்கள், கைப்பேசியில் பேசிக் கொண்டிருந்த சாண்ட்ரா நான்ட்சாவிடமிருந்து ஒரு கைப்பேசி, ஹெட்செட், சாா்ஜா் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.

இது தொடா்பாக துணை சிறை அலுவலா் வசந்தி கொடுத்த புகாரின்பேரில், புழல் காவல் நிலைய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

கைதி சாண்ட்ரா நான்ட்சா, கோவையில் ஒரு கடத்தல் வழக்கிலும், சம்சியா சென்னையில் போதைப் பொருள் வழக்கிலும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

மின் கணக்கீட்டை மொபைல் செயலி மூலம் பதிவு செய்ய செயல் முறை பயிற்சி

இன்று யாருக்கெல்லாம் அதிர்ஷ்டம்: தினப்பலன்

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

SCROLL FOR NEXT