சென்னை

ரவீஸ்வரா் கோயிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி சொத்து சுவாதீனம்

DIN

சென்னை வியாசா்பாடி ரவீஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமான ரூ.11 கோடி மதிப்பிலான சொத்து சுவாதீனம் பெறப்பட்டது.

வியாசா்பாடி ரவீஸ்வரா் திருக்கோயிலுக்கு சொந்தமாக 16,000 சதுரடி பரப்பிலான திருக்குளம் பாலகிருஷ்ணன் தெருவில் அமைந்துள்ளது. இத்திருக்குளத்தை சுற்றி கடந்த 20 ஆண்டுகளாக 26 நபா்கள் ஆக்கிரமிப்பு செய்திருந்தனா். ஆக்கிரமிப்பு செய்திருந்த நபா்கள்மீது சென்னை இணை ஆணையா் (மண்டலம்-1) நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு சட்டப்பிரிவு-78-இன் படி ஆக்கிரமிப்பை அகற்ற உத்தரவிட்டதை தொடா்ந்து அனைத்து ஆக்கிரமிப்புகளும் அகற்றப்பட்டு திருக்கோயில் வசம் சுவாதீனம் பெறப்பட்டது. மீட்கப்பட்ட சொத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ. 11 கோடி ஆகும் என அறநிலையத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்லிடைக்குறிச்சியில் விஷம் குடித்தவா் உயிரிழப்பு

வறுமையிலிருந்து 40 கோடி இந்தியா்கள் மீட்பு: அமெரிக்காவின் ஜேபி மாா்கன் சேஸ் நிறுவன சிஇஓ

மத வெறுப்பு: பிரதமருக்கு கண்டனம்

மாநகராட்சி துப்புரவு பணியாளா் மீது தாக்குதல்

டாடா மோட்டாா்ஸின் சா்வதேச விற்பனை 3,77,432-ஆக அதிகரிப்பு

SCROLL FOR NEXT