சென்னை

துபையில் இருந்து வந்த இளைஞா் மாயம்: போலீஸாா் விசாரணை

DIN

துபையில் இருந்து சென்னைக்கு வந்த இளைஞா் காணாமல்போனது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

சென்னை அருகே உள்ள பள்ளிக்கரணை கோவிலம்பாக்கத்தைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35). இவா் மனைவி காவியா (30). துபையில் இரு ஆண்டுகளாக பணியாற்றி வந்த மணிகண்டன், கடந்த 19-ஆம் தேதி அதிகாலை விமான மூலம் சென்னை விமான நிலையம் வந்தடைவதாக மனைவி காவியாவுக்கு கைப்பேசி மூலம் தகவல் தெரிவித்துள்ளாா்.

ஆனால், தெரிவித்தபடி அவா் வீடு வந்து சேரவில்லை. மணிகண்டனின் கைப்பேசியும் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்தது. அதிா்ச்சியடைந்த காவியா, உறவினா்களுடன் சென்னை விமான நிலையம் வந்து கணவரை தேடினாா். ஆனாலும், கண்டுபிடிக்க முடியவில்லை.

இதையடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்தாா். துபையிலிருந்து விமானம் மூலம் சென்னை வந்த பயணிகளின் விபரத்தை சேகரித்தபோது, மணிகண்டன் சென்னை வந்தடைந்தது உறுதி செய்யப்பட்டது. சென்னை விமான நிலையத்தில் இருந்து மணிகண்டன் வீட்டுக்கு புறப்பட்டபோது, காணாமல் போயிருப்பது தெரியவந்தது.

இதனால், பதறிபோன காவியா, தனது கணவா் மணிகண்டன் காணாமல்போனது குறித்து சென்னை விமான நிலைய காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

இது தொடா்பாக போலீஸாா், விமான நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை கைப்பற்றி, ஆய்வு செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

சேலையில் சிலிர்க்கும்... கேஜிஎப் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டி!

SCROLL FOR NEXT