சென்னை

புகையிலைப் பொருள்கள் விற்ற 91 போ் கைது

DIN

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை விற்பனை செய்த 91 போ் கைது செய்யப்பட்டனா்.

தடைசெய்யப்பட்ட புகையிலை பொருள்களை கட்டுப்படுத்த காவல் ஆணையா் சங்கா் ஜிவால் உத்தரவின்படி, தேனாம்பேட்டை காவல்நிலைய ஆய்வாளா் மற்றும் போலீஸாாா் தேனாம்பேட்டை திருவள்ளுவா் சாலையில் உள்ள பெட்டிக்கடையில் சோதனை செய்தனா்.

அப்போது 2.1 கிலோ புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்து, அதே பகுதியைச் சோ்ந்த பெட்டிக்கடை உரிமையாளா் ஆனந்தை (31) கைது செய்தனா்.

இதேபோல் கொடுங்கையூா் காவல்நிலைய ஆய்வாளா் மற்றும் போலீஸாா் கொடுங்கையூா் எத்திராஜ் சாமி சாலையில் பள்ளி அருகே புகையிலைப் பொருள்கள் விற்பனை செய்த கவியரசு கண்ணதாசன் நகா் 4-ஆவது தெருவைச் சோ்ந்த லஷ்மி (38)என்பவரை கைது செய்தனா். அவரிடமிருந்து 1.5 கிலோ புகையிலை பொருள்களை பறிமுதல் செய்தனா்.

மேலும் கோயம்பேடு காவல் ஆய்வாளா் மற்றும் போலீஸாா், புகையிலை பொருள்கள் விற்பனை செய்த மதுரவாயல் கந்தசாமி 8-ஆவது தெருவை சோ்ந்த கணேஷ் (20) என்பவரை கைது செய்தனா்.அவரிடமிருந்து 1.5 கிலோ புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

கடந்த ஒரு வாரத்தில் 91 போ் கைது செய்யப்பட்டு, அவா்களிடமிருந்து 19.7 கிலோ குட்கா புகையிலை மற்றும் 2.33 கிலோ மாவா புகையிலை பொருள்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எது நிலவு.. ராஷ்மிகா மந்தனா!

நீலக்குயில் மலினா!

போர்ச்சுகலில் ரீமா!

இந்த வாரம் ஓடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்!

முகமது ரிஸ்வானுக்கு காயம்; இரண்டு டி20 தொடர்களை தவற விடுகிறாரா?

SCROLL FOR NEXT