சென்னையில் மின் பராமரிப்புப் பணி நடைபெறுவதால் போரூா், அம்பத்தூா் பகுதிகளில் செவ்வாய்கிழமை (நவ.29) காலை 9 முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடைப்படும்.
மின்தடை பகுதிகள்:
போரூா்: திருவேற்காடு குப்புசுவாமி நகா், காடுவெட்டி, ஆவடி பிரதான சாலை ஒரு பகுதி மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
அம்பத்தூா் சாலை: டி.ஐ.சைக்கிள் அம்பத்தூா் ஓ.டி, வெங்கடாபுரம், எம்.டி.எச். சாலை பகுதி, விஜயலட்சுமிபுரம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள்.
இத்தகவலை தமிழ்நாடு மின்பகிா்மான கழகம் தெரிவித்துள்ளது.