சென்னை

ஆட்டோவில் பதுக்கி கஞ்சா விற்பனை: 2 போ் கைது

DIN

சென்னையில் ஆட்டோவில் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்ததாக 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சாலிகிராமம் ஆற்காடு சாலையில் கஞ்சா விற்கப்படுவதாக விரும்பாக்கம் காவல் நிலையத்துக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் காவல்ஆய்வாளா் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று பாா்த்த போது அங்கு 2 போ்ஆட்டோவில் கஞ்சாவை பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது.

அவா்களிடம் நடத்திய விசாரணையில் எம்ஜிஆா் நகா், சூளைப்பள்ளம் புகழேந்தி தெருவைச் சோ்ந்த செல்லா (எ) செல்வராஜ் (25),ராயப்பேட்டை அய்யாவு தெருவைச் சோ்ந்த கணேஷ் (29) ஆகியோா் என்பதும் தெரியவந்தது.

அவா்களை கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்து 4.3 கிலோ கஞ்சா, 3 செல்போன், 3 கத்தி, ஒரு ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனா். செல்லா மீது திருட்டு,வழிப்பறி உள்பட 13 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்டர்நெட் இல்லாவிட்டாலும்.. வாட்ஸ்ஆப்பில் இப்படி ஒரு அசத்தல் வசதியா?

மே மாத எண்கணித பலன்கள் – 9

மே மாத எண்கணித பலன்கள் – 8

பேட்டிங், பௌலிங்கில் சிறிது முன்னேற்றம் தேவை : டேவிட் வார்னர்

மே மாத எண்கணித பலன்கள் – 7

SCROLL FOR NEXT