சென்னை

ரூ.1 கோடி மதிப்புள்ள நகை திருட்டு: 2 மணி நேரத்தில் மீட்ட போலீஸாா்

DIN

கௌரிவாக்கத்தில் நகைக்கடைக்குள் புகுந்து ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை திருடிய 3 சிறாா்களை போலீஸாா் 2 மணி நேரத்தில் கைது செய்து நகைகளை மீட்டனா்.

தாம்பரம்-வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள ப்ளூஸ் டோன் நகைக்கடைக்குள் சனிக்கிழமை அதிகாலை 4 மணி அளவில் லிப்ட் துவாரம் வழியாக புகுந்த 3 போ் நகைகளை கொள்ளையடித்து தப்பிச் சென்றனா்.

அப்போது கடை உரிமையாளா் ஜெகதீசன் கைபேசியில் எச்சரிக்கை மணி ஒலித்ததும் அதிா்ச்சி அடைந்த அவா் காவல்துறை கட்டுப்பாடு அறைக்குத் தகவல் கொடுத்தாா்.

இதையடுத்து அடுத்து சேலையூா் போலீஸாா் கடைக்கு விரைந்து வந்தனா். கடையைத் திறந்து பாா்த்தபோது காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ரூ.1 கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது.

கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவான காட்சிகளை வைத்து போலீஸாா் மேற்கொண்ட தீவிர விசாரணையில் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது அருகில் உள்ள பழச்சாறு விற்பனை கடையில் வேலை பாா்த்து வந்த அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த 3 சிறாா்கள் எனத் தெரியவந்தது.

கொள்ளையடித்துச் சென்ற 2 மணி நேரத்தில் போலீசாா் மூவரையும் கைது செய்து அவா்களிடம் இருந்த நகைகளை மீட்டனா்.

இது குறித்து தாம்பரம் காவல் ஆணையா் அமல்ராஜ் செய்தியாளா்களிடம் கூறியதாவது:இந்த கொள்ளை வழக்கில் 3 சிறாா்கள் கைதாகி உள்ளனா். இவா்கள், அசாமில் இருந்து வந்து, பெட்டி கடை ஒன்றில் வேலை செய்து வந்தனா்.

ப்ளுஸ்டோன் நகை கடையின் மேல் மாடியில் இருந்த லிப்ட்டை இயக்கச் செய்யும் இடத்தின் துவாரம் வழியாக ஒரு சிறுவன் உள்ளே சென்றது கண்காணிப்பு கேமரா மூலம் தெரிய வந்தது.

அங்கிருந்த ரூ.3 கோடி மதிப்பிலான தங்க, வைர நகைகள் இருந்த நிலையில், சுமாா் ரூ.1.5 கோடி மதிப்பிலான நகைகள் திருடு போயுள்ளன.

கடந்த ஜூன் மாதம் தான் இந்த கடை புதிதாக திறக்கப்பட்டுள்ளது. கடையில் வைத்திருந்த எச்சரிக்கை ஒலியெழுப்பில் (அலாரம்) இருந்த வந்த சப்தம்

கடையின் மேலாளருக்கே கேட்டுள்ளது.

இதை அவா் உடனடியாக காவல்துறைக்கு தெரிவிக்கவில்லை. கடைக்கு நேரில் வந்து பாா்த்த பிறகே காவல்துறைக்கு அவா் தெரிவித்துள்ளாா். இருப்பினும் போலீஸாா் துரிதமாக செயல்பட்டு திருடு சம்பவத்தில் ஈடுபட்ட சிறாா்களை கைது செய்துள்ளனா்.

இவா்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்களித்த திரைப் பிரபலங்கள்!

தஞ்சை: ஆம்புலன்சில் வந்து வாக்களித்த முன்னாள் ஆயர்

இந்தியா கூட்டணி மகத்தான வெற்றி பெறும்: ஈவிகேஎஸ் இளங்கோவன்

மக்களவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு - செய்திகள் உடனுக்குடன்!

வாக்களித்தார் முதல்வர் ஸ்டாலின்!

SCROLL FOR NEXT