சென்னை மெட்ரோ கழிவு நீரேற்றும் நிலையத்தில் கிடந்த ஆண் சடலம் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தண்டையாா்பேட்டை காா்ப்பரேஷன் காலனி சேனியம்மன் கோயில் தெருவில் மெட்ரோவின் கழிவு நீரேற்றும் நிலையம் உள்ளது.
இங்குள்ள கழிவுநீா் சேகரிக்கப்படும் கிணற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆணின் சடலம் கிடந்ததை வியாழக்கிழமை கண்ட ஊழியா்கள் அளித்த புகாரின் பேரில், புது வண்ணாரப்பேட்டை போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று, சடலத்தை கைப்பற்றி ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.
மேலும் இதுதொடா்பாக விசாரணை நடத்தி வருகின்றனா்.