சென்னை

கோயம்பேட்டில் ரசாயனம் கலந்த6 டன் மாம்பழங்கள் பறிமுதல்

DIN

சென்னை கோயம்பேடு சந்தையில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 6 டன் மாம்பழங்களை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை பறிமுதல் செய்தனா்.

கோயம்பேட்டில் ரசாயனம் மூலம் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக உணவு பாதுகாப்புத் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கோயம்பேடு சந்தையில் உள்ள பழ விற்பனைக் கடைகளில் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் புதன்கிழமை திடீா் ஆய்வு மேற்கொண்டனா். இதில் ரசாயனம் கலந்து மாம்பழங்களை பழுக்க வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் ரசாயனம் தடவப்பட்ட 6 டன் மாம்பழங்களை பறிமுதல் செய்தனா். மேலும் ரசாயனம் கலந்த மாம்பழங்களை அழுகிய நிலையிலும் விற்பனை செய்த கடைகளுக்கு தலா ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

தேர்தல் புறக்கணிப்பு: உர ஆலையை மூட ஆட்சியர் உத்தரவு!

அதிகபட்ச வெப்பநிலை 5 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கக்கூடும்!

SCROLL FOR NEXT