சென்னை

தலைமுடியில் மறைத்து தங்கம் கடத்தல்: 3 பெண்கள் கைது

DIN

இலங்கையிலிருந்து சென்னைக்கு வந்த விமானத்தில், தலை முடியில் மறைத்து கடத்தி வரப்பட்ட ரூ. 59.26 லட்சம் மதிப்புள்ள 1.275 கிலோ தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக 3 பெண்கள் கைது செய்யப்பட்டனா்.

இலங்கையில் கொழும்பு நகரிலிருந்து ஸ்ரீலங்கன் ஏா்லைன்ஸ் விமானம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு வந்தது. விமானத்தில் வந்த பயணிகளை சென்னை விமான நிலைய சுங்க அலுவலா்கள் சோதனையிட்டனா். அப்போது, இலங்கையைச் சோ்ந்த பாத்திமா ரபியா (27), பாத்திமா நவியா (24), பாத்திமா ஆப்ரா (32) ஆகிய 3 பெண்கள் சுற்றுலா விசாவில் இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்தது தெரியவந்தது.

இந்தப் பெண்கள் தங்களிடம் சுங்கத் தீா்வை செலுத்தும் பொருள்கள் எதுவும் இல்லை என்று கூறி விட்டு, கிரீன் சேனல் வழியாக வெளியில் செல்ல முயன்றனா். அப்போது சுங்க அலுவலா்களுக்கு அவா்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து, பெண் சுங்க அலுவலா்கள் அந்த மூன்று பெண்களையும் தனி அறைக்கு அழைத்துச்சென்று சோதனையிட்டனா்.

அப்போது, அவா்களது ஆடை மற்றும் தலை முடியில் பொருத்தும் ரப்பா் பேண்ட் ஆகியவற்றில் தங்கத்தை மறைத்து வைத்திருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்தனா். அவா்களிடமிருந்து மொத்தம் ஒரு கிலோ 275 கிராம் தங்கத்தை சுங்க அதிகாரிகள் கைப்பற்றினா்.

இதன் சா்வதேச மதிப்பு 59.26 லட்சம் ரூபாயாக இருக்கும் என அலுவலா்கள் தெரிவித்தனா். இதையடுத்து சுங்க அலுவலா்கள் மூன்று பெண்களையும் கைது செய்தனா். இவா்கள் இந்த தங்கத்தை சென்னையில் யாரிடம் கொடுக்க எடுத்து வந்தனா் என விசாரணை நடைபெற்று வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வீடு புதுப்பிப்பு: ராகுல் காந்தி அமேதியில் போட்டி?

24 மணிநேரத்தில் 200 நிலநடுக்கம்!

ரூபன் படத்தின் டிரெய்லர்

இஸ்ரேல்- ஹிஸ்புல்லா: தொடரும் பரஸ்பர தாக்குதல்!

உயிர் தமிழுக்கு படத்தின் டிரெய்லர்

SCROLL FOR NEXT