சென்னை

மெரீனாவில் வியாபாரி தற்கொலை முயற்சி

DIN

சென்னை மெரீனாவில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வியாபாரியை மீட்புக் குழுவினா் காப்பாற்றினா்.

சென்னை, பேசின் பாலம், மூலக்கொத்தளம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (43). வியாபாரியான இவா், கடன் சுமையால் விரக்தியில் இருந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மெரீனா கடற்கரையில் விவேகானந்தா் இல்லம் எதிரேயுள்ள பகுதிக்கு வந்த மனோகரன், திடீரென கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.

அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மெரீனா மீட்புப் படையினா் உடனடியாக கடலில் குதித்து மனோகரனை மீட்டனா். பின்னா் அவரை, மெரீனா போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் மனோகரன், கடன் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பஞ்சாப் காங்கிரஸ் தலைவர்கள் பாஜகவில் இணைந்தனர்!

திருச்சூரில் பூரம் விழா கோலாகலம்!

பறவைக் காய்ச்சலின் அறிகுறி என்ன? அது எப்படி பரவும்?

கறந்த பாலில் பறவைக்காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் கடும் எச்சரிக்கை

நினைவுகொள்... மீண்டெழு... ரச்சிதா மகாலட்சுமி!

SCROLL FOR NEXT