சென்னை மெரீனாவில் கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்ற வியாபாரியை மீட்புக் குழுவினா் காப்பாற்றினா்.
சென்னை, பேசின் பாலம், மூலக்கொத்தளம், அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் மனோகரன் (43). வியாபாரியான இவா், கடன் சுமையால் விரக்தியில் இருந்தாா். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை மெரீனா கடற்கரையில் விவேகானந்தா் இல்லம் எதிரேயுள்ள பகுதிக்கு வந்த மனோகரன், திடீரென கடலில் குதித்து தற்கொலைக்கு முயன்றாா்.
அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த மெரீனா மீட்புப் படையினா் உடனடியாக கடலில் குதித்து மனோகரனை மீட்டனா். பின்னா் அவரை, மெரீனா போலீஸாரிடம் ஒப்படைத்தனா். விசாரணையில் மனோகரன், கடன் தொல்லை காரணமாக தற்கொலைக்கு முயன்றது தெரியவந்தது.